நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

Date:

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

குறைந்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காற்றை கொண்ட முதல் இடைப்பருவ காலத்தில் நாடு தற்போது உள்ளது எனவும் இதுவே வெப்பம் அதிகரிக்க காரணம் எனவும் வளிமண்டலவியல் திணைக்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலான நேரமே மிகவும் வெப்பமான நேரம் என்றும், இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால் மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளிர் நிற ஆடைகளை அணியவும், வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

டொலரின் ஆதிக்கம் முடியப்போகிறதா? ஹார்முஸ் நீரிணையும் உலக அரசியலும்.

-Dr.Ashker Aroos (Naleemi) ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் அதிகாரத்திற்கு...

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...