நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

Date:

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படையான ஐஆர்ஜிசி தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது மூன்றாவது நாளாக இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

ஈரான் மீது நடத்தப்படும் போர் தாக்குதலால் உலகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது.

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...