பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Date:

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SL CERT) பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பல ஒன்லைன் மோசடி சம்பவங்கள் குறித்து ஏற்கனவே தங்கள் நிறுவனத்திற்குப் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக SLCERT இன் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் – குறிப்பாக சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் – தள்ளுபடிகள், ரொக்கப் பரிசுகள் அல்லது சிறப்பு விளம்பரச் சலுகைகள் என மோசடி விளம்பரங்கள் மற்றும் தீங்கிழைக்கும் இணைப்புகள் ஆன்லைனில் தோன்றும் அபாயம் அதிகரித்துள்ளது.

இத்தகைய தீங்கிழைக்கும் இணைப்புகள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிற முக்கியத் தரவுகளைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மோசடி வலைத்தளங்களுக்கு பயனர்களை அடிக்கடி வழிநடத்துகின்றனர்.

எனவே, ஒன்லைனில் காணப்படும் தேவையற்ற இணைப்புகள் அல்லது விளம்பரங்களை அணுகும்போது விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...