புகழ்பெற்ற எகிப்திய காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வருக்கு அங்காராவில் மாபெரும் கௌரவம்

Date:

புனித அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் விடுத்த விசேட அழைப்பின் பேரில், எகிப்தின் புகழ்பெற்ற குர்ஆன் ஓதுபவர் (காரி) மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர், அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர் அவர்கள் இறைமறை குர்ஆனின் வசனங்களை மிக இனிமையான குரலில் ஓதினார்.

இந்தச் சந்திப்பின் போது, எகிப்திய முறைப்படி தயாரிக்கப்பட்ட உயரிய ‘மஸ்ஹப் மிஸ்ர்’ (எகிப்திய குர்ஆன் பிரதி) ஒன்றை அர்தூகானுக்கு அவர் பரிசாக வழங்கினார்.

துருக்கி மற்றும் எகிப்து இடையிலான கலாச்சார மற்றும் ஆன்மீக உறவை மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

‘துருக்கி அதிபரின் மாளிகையில் குர்ஆன் வசனங்களை ஓதியதுடன், எகிப்தின் அடையாளமாகத் திகழும் புனித குர்ஆன் பிரதியை அவருக்கு வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி’ என காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ மழை

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும்...

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...