புகழ்பெற்ற எகிப்திய காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வருக்கு அங்காராவில் மாபெரும் கௌரவம்

Date:

புனித அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் விடுத்த விசேட அழைப்பின் பேரில், எகிப்தின் புகழ்பெற்ற குர்ஆன் ஓதுபவர் (காரி) மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர், அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர் அவர்கள் இறைமறை குர்ஆனின் வசனங்களை மிக இனிமையான குரலில் ஓதினார்.

இந்தச் சந்திப்பின் போது, எகிப்திய முறைப்படி தயாரிக்கப்பட்ட உயரிய ‘மஸ்ஹப் மிஸ்ர்’ (எகிப்திய குர்ஆன் பிரதி) ஒன்றை அர்தூகானுக்கு அவர் பரிசாக வழங்கினார்.

துருக்கி மற்றும் எகிப்து இடையிலான கலாச்சார மற்றும் ஆன்மீக உறவை மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

‘துருக்கி அதிபரின் மாளிகையில் குர்ஆன் வசனங்களை ஓதியதுடன், எகிப்தின் அடையாளமாகத் திகழும் புனித குர்ஆன் பிரதியை அவருக்கு வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி’ என காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...