மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

Date:

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாத்தறையில் செய்யப்பட்டுள்ளன.

 “வளமான நாட்டின் பெருமை அவள் – தேசத்தின் முன்னோடி” எனும் கருப்பொருளின் கீழ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ருஹுணு பல்கலைக்கழகத்தில் இது நடைபெறவுள்ளது.

இலங்கை மகளிர் பணியகத்துடன் இணைந்த மகளிர் அமைப்புகளின் சுமார் 1500 உறுப்பினர்களின் பங்கேற்புடன் இது நடைபெறவுள்ளது.

இதேவேளை, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் நாளை (8) கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் பங்கேற்புடன் இது நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா நாளை (8) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...