லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

Date:

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொழும்பு மாவட்டத்தில் அதன் புதிய விலை 4,330 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,862 ரூபாவாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தைகளைப் பாதிக்கும் தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக விலை திருத்தம் அவசியமானது என்று நிறுவனம் கூறியது.

அதேநரேம், நாடு தழுவிய விநியோக வலையமைப்பு மூலம் தடையற்ற சேவையைப் பேணுவதோடு, இலங்கை முழுவதும் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தர எரிவாயுவை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக லாஃப்ஸ் கேஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக லிட்ரோ கேஸ் நிறுவனமும் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...