வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

Date:

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே, நீரை வீண் விரயம் செய்யாது, அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.

அத்துடன், அளவுக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குழாய் ஊடாக நீரைப் பெற்றுக் கொள்ளும் இறுதி முனையத்தில் உள்ள இடங்களுக்கும் செல்லும் நீரின் அழுத்தம் குறையக்கூடும்.

நாட்டில் வறட்சி நிலைமை மேலும் மோசமடைந்தால், எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, தடையின்றி நீர் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்ல பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...