ஈரானின் பசிஜ் எனப்படும் துணை இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியைக் கொன்றதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கீழ் செயல்பட்டு வரும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைமைத் தளபதியான கோலம்ரெசா சுலைமானி கொல்லப்பட்டதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இராணுவத் தளபதி கோலம்ரெசா சுலைமானி கொல்லப்பட்டது குறித்து ஈரானின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
