ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

Date:

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில் உள்ள ஈரானிய கடற்ப்டையினரை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது.

ஈரானில் இருந்து வந்த இரண்டாவது கப்பலான பூஷெரில் இருந்த பணியாளர்கள் மற்றும் IRIS Dena கப்பலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட கடற்படையினரை ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று இலங்கை அரசாங்கத்தினை அமெரிக்கா வலியுறுத்தியதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 4 ஆம் திகதி காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் ஈரானுக்குச் சொந்தமான IRIS Dena போர்க்கப்பல் மூழ்கியது.

அதிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் மற்றும் தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ள ‘ஐரிஸ் புஷெர்’ என்ற மற்றொரு ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் ஆகியோரை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தாக்குதலில் குறித்த போர்க்கப்பல் நீரில் மூழ்கியதுடன் பலர் உயிரிழந்த நிலையில் மேலும் 32 பேர் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து இலங்கை இரண்டாவது ஈரானிய கப்பலானIRIS Bushehr இல் இருந்து 204 பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் வெலிசறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

குறித்த கப்பல் பரிசோதனையின் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பின்னர். திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கமாண்டோ புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்

குறித்த ஈரானிய கப்பலில் 208 பேர் பயணித்ததாகவும்; 53 அதிகாரிகளும், 84 கேடட் அதிகாரிகளும், 48 சிரேஷ்ட கடற்படையினர் உள்ளடங்களாக 23 பணியாளர்கள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது

அத்துடன் IRIS Bushehr கப்பல் இலங்கையின் அனுமதியுடன் கொழும்பு துறைமுகத்தினை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது

இந்த நிலையிலேயே ஈரானில் இருந்து வந்த இரண்டாவது கப்பலான பூஷெரில் இருந்த பணியாளர்கள் மற்றும் IRIS Dena கப்பலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட கடற்படையினரை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் ஜெய்ன் ஹோவெல் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கடற்படையினரை ஈரான் தனது பிரசார நோக்கங்களுக்காக பயன்படுத்துவதனை தவிர்க்குமாறும் அவர்களை திருப்பி அனுப்பும் விடயத்தில் இலங்கை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதேவேளை, IRIS Dena கப்பலின் உதிரிபாகங்கள் காலி துறைமுக பகுதியில் கரையொதுங்கியுள்ளது

இதனிடையே அமெரிக்காவின் தாக்குதலில் சேதமடைந்த கப்பலின் உதிரிபாகங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் காலி துறைமுக பகுதியில் கரையொதுங்கியுள்ளதனை அவதானிக்க முடிந்தது

இதேவேளை இந்தியக் கடற்படையின் ‘ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக்கப்பல், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கும் இடையிலான பயிற்சிப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் நல்லெண்ண அடிப்படையிலான இந்த விஜயம் அமைந்துள்ளது.

ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக் கப்பாலானது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...