ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

Date:

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய்

உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க அதிகார வர்க்கம் துடிக்கிறது. “ஊடகமே அதிகாரம்” (Media is Power) என்பதை உலகம் இன்று மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டிருக்கிறது.

ஊடக தர்மத்தை அடுத்தவர்களுக்கு போதித்துக்கொண்டு தனது நாட்டுக்குள்ளேயே கடுமையான ஊடகத் தணிக்கையை இஸ்ரேல் விதித்தது. கடந்த 3 வருடங்களில் பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலையில், சர்வதேச ஊடகங்களின் பார்வையைத் தடுத்துவிட்டு, இதுவரை 248 ஊடகவியலாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.

ஏன் இந்த அடக்குமுறை? ஏனெனில், அவர்கள் உண்மையை விட அதிகாரத்தையே அதிகம் விரும்புகிறார்கள்.

பின்வரும் இந்த 3 உண்மைகள் உங்கள் சிந்தனைக்காக:

 உண்மை 1: 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட TikTok, இஸ்ரேல் பற்றிய உலகளாவிய பார்வையை மாற்றியமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகித்தது. பலகீனர்களின் குரல் உலக அரங்கில் ஒலிக்கத் தொடங்கியது.

உண்மை 2: “நாம் டிக்டாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று அமெரிக்க சியோனிஸ்டுகளிடம் நெதன்யாகு பகிரங்கமாகத் தெரிவித்தார். உண்மையான தகவல்கள் பரவுவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

உண்மை 3: ஜனவரி 23, 2026: அமெரிக்க சியோனிஸ்டுகள் டிக்டாக்கின் கட்டுப்பாட்டைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.

“யார் ஊடகத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.”

ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக மாறும்போது, உண்மை மௌனிக்கப்படுகிறது. நம்முடைய கதைகளை, நம்முடைய வலிகளை நாமே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் குரலைத் தொடர்ந்து ஒலிப்போம்! .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...