சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் விலையை அதிகரிக்காமல் இருக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதன்படி, இறக்குமதியாளர்களுக்கு பெற்றோல் ஒக்டேன் 92 லீற்றருக்கு ரூ. 20, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்கு ரூ. 100 மானியமாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் குறித்த எரிபொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதற்கயைம 2026 மார்ச் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், உரிய விற்பனை விலையிலும் இறக்குமதி செய்யப்படும் விலை அதிகமாக இருப்பின், எரிபொருள் இறக்குமதி விநியோகஸ்தர்களுக்கு குறித்த தொகையை செலுத்துவதன் மூலம் மக்களுக்கு இம்மானியம் வழங்கப்படவுள்ளது.
