நாட்டின் ஒரு சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகலாம். காலை வேளையில் கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
