நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய , சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமத்திய மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
