நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

Date:

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படையான ஐஆர்ஜிசி தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது மூன்றாவது நாளாக இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

ஈரான் மீது நடத்தப்படும் போர் தாக்குதலால் உலகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...