ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

Date:

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) இன்று (26) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்.

ரஷ்யாவின் எரிசக்தித் துறை பிரதி அமைச்சருக்கும், இலங்கையின் நிதித்துறை பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவுக்கும் இடையே இன்று கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ரஷ்ய பிரதி அமைச்சர் இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்க உள்ளார்.

இலங்கை தனது எரிசக்தி நெருக்கடியைக் கடந்து செல்ல உதவும் வகையில், இந்தச் சந்திப்புகளின் போது பல கலந்துரையாடல்களும் உடன்படிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தொடர்புடைய கலந்துரையாடல்களுக்குப் பின்னர், அவர் நாளை வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருடன் இரவு விருந்தில் கலந்துகொள்வார்.

எரிசக்தி பிரதி அமைச்சர் 28 ஆம் திகதி ரஷ்யாவுக்குப் புறப்பட உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...