லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

Date:

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொழும்பு மாவட்டத்தில் அதன் புதிய விலை 4,330 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,862 ரூபாவாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தைகளைப் பாதிக்கும் தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக விலை திருத்தம் அவசியமானது என்று நிறுவனம் கூறியது.

அதேநரேம், நாடு தழுவிய விநியோக வலையமைப்பு மூலம் தடையற்ற சேவையைப் பேணுவதோடு, இலங்கை முழுவதும் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தர எரிவாயுவை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக லாஃப்ஸ் கேஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக லிட்ரோ கேஸ் நிறுவனமும் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...