விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

Date:

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த பஸ் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். நாட்டின் பொது போக்குவரத்து துறையில் விசேட தேவையுடையவர்களுக்கான போக்குவரத்து உரிமைகளை வழங்கும் வகையில் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக் காலமும் இதுபோன்றதொரு சந்தர்ப்பம் குறித்த சமூகத்தினருக்கென பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

சக்கரை நாற்காலி பயன்படுத்தும் விசேட தேவையுடையவர்கள் இலகுவாக ஏறக்கூடிய வகையில் 430.7 மில்லியன் ரூபா செலவில் பிரத்தியேக மிதி பலகையைக் கொண்டதாக இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டப்பட்ட குறித்த 10 பஸ் வண்டிகள் நாட்டை வந்தடைந்துள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட குறித்த பஸ் வண்டிகள் மெட்ரோ நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...