20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது

Date:

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற இரு அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் தீயணைப்பு அதிகாரி மற்றும் மீட்பு பணியாளர் ஒருவர் இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. 2026ம் ஆண்டுக்கென சுற்றுலா உணவகமொன்றிற்கு தீ பாதுகாப்பு உத்தரவாத சான்றிதழை வழங்குவதற்காக இந்த இலஞ்ச பணம் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 40 ஆயிரம் ரூபாவை கோரிய போதிலும் அதனை 35000 மாக குறைத்துள்ளனர். அதில் 20 ஆயிரம் ரூபாவை இரண்டாம் கட்டமாக பெறும் சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.

சந்தேக நபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 20ம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை...