கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று (30) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம், மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெறும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேநேரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் சேவைகள் ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
