தற்போதைய நிலையில் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல் மேலும் வீழ்ச்சியடைவதற்கான பாரிய அபாயம் இல்லை என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்த விலை அதிகரிப்பு என்பன, உள்நாட்டு பொருளாதார முகாமைத்துவப் பிரச்சினைகள் மற்றும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக உருவானவை என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அக்காலப்பகுதியில் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வு, இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிலைமைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வாறான எரிசக்தி அதிர்ச்சிகளை முகாமைத்துவம் செய்வதில் 2022 ஆம் ஆண்டு இருந்த நிலைமையை விட, இலங்கை தற்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
