நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறைந்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காற்றை கொண்ட முதல் இடைப்பருவ காலத்தில் நாடு தற்போது உள்ளது எனவும் இதுவே வெப்பம் அதிகரிக்க காரணம் எனவும் வளிமண்டலவியல் திணைக்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலான நேரமே மிகவும் வெப்பமான நேரம் என்றும், இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால் மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளிர் நிற ஆடைகளை அணியவும், வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
