பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Date:

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SL CERT) பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பல ஒன்லைன் மோசடி சம்பவங்கள் குறித்து ஏற்கனவே தங்கள் நிறுவனத்திற்குப் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக SLCERT இன் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் – குறிப்பாக சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் – தள்ளுபடிகள், ரொக்கப் பரிசுகள் அல்லது சிறப்பு விளம்பரச் சலுகைகள் என மோசடி விளம்பரங்கள் மற்றும் தீங்கிழைக்கும் இணைப்புகள் ஆன்லைனில் தோன்றும் அபாயம் அதிகரித்துள்ளது.

இத்தகைய தீங்கிழைக்கும் இணைப்புகள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிற முக்கியத் தரவுகளைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மோசடி வலைத்தளங்களுக்கு பயனர்களை அடிக்கடி வழிநடத்துகின்றனர்.

எனவே, ஒன்லைனில் காணப்படும் தேவையற்ற இணைப்புகள் அல்லது விளம்பரங்களை அணுகும்போது விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...