மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர்.
கெப் வாகனமொன்றின் செஷி இலக்கத்தை மாற்றி அதனை போலியாக பதிவு செய்வதற்கு உதவி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைதான அவரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
