வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

Date:

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே, நீரை வீண் விரயம் செய்யாது, அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.

அத்துடன், அளவுக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குழாய் ஊடாக நீரைப் பெற்றுக் கொள்ளும் இறுதி முனையத்தில் உள்ள இடங்களுக்கும் செல்லும் நீரின் அழுத்தம் குறையக்கூடும்.

நாட்டில் வறட்சி நிலைமை மேலும் மோசமடைந்தால், எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, தடையின்றி நீர் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்ல பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...