இரண்டு மாதங்களில் 1,480 மில்லியன் டொலர் வருமானம்!

Date:

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம் (Remittances) 1,480.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாட்டுக்கு அனுப்பப்பட்ட 1,121.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 32% வளர்ச்சியாகும்.

பெப்ரவரி மாத வளர்ச்சி: இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் கிடைத்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் கிடைத்த 548.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 33% வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் அண்மைய மாதங்களில் அவதானிக்கப்பட்ட நேர்மறையான போக்கு, 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...