இரண்டு மாதங்களில் 1,480 மில்லியன் டொலர் வருமானம்!

Date:

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம் (Remittances) 1,480.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாட்டுக்கு அனுப்பப்பட்ட 1,121.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 32% வளர்ச்சியாகும்.

பெப்ரவரி மாத வளர்ச்சி: இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் கிடைத்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் கிடைத்த 548.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 33% வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் அண்மைய மாதங்களில் அவதானிக்கப்பட்ட நேர்மறையான போக்கு, 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...