ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரல்

Date:

ஈஸ்டர் ஞயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட அறிவிப்பை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் நீதி, உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும் என்பதே இந்த பிரார்த்தனை தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

அன்றைய தினம், நாட்டின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...