தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

Date:

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தவின் (ஓய்வுபெற்ற) அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முப்படைகள், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பங்களிப்புடன் இந்த விசேட பாதுகாப்புப் பொறிமுறை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த கூட்டுத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நடைபெறவுள்ள பல்வேறு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவுள்ளன.

இதற்காக, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன், இது முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்புடன் கூட்டுச் செயற்பாட்டு மையமாகச் செயற்படுகின்றது.

இந்த விசேட செயற்பாட்டு மையத்தை பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்:

தொலைபேசி எண்கள்: 011- 2013051 / 011- 2027148 011- 2027149 / 011- 2430912

மின்னஞ்சல் முகவரி: igp.opsroom@police.gov.lk

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...