துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

Date:

துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை மிக உற்சாகமாகக் கொண்டாடினர்.

புதிய தொடக்கம், ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுக் மேசை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதன்போது இலங்கையின் பாரம்பரிய இனிப்பு வகைகளான கொண்டைப்பணியாரம், பலகாரங்கள், பாற்சோறு உள்ளிட்ட பல்வேறு சுவையான தின்பண்டங்கள் விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்வு துருக்கியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினர் இடையே கலாச்சாரப் பிணைப்பையும், பரஸ்பர ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்தது.

பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றப்பட்டு, புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட தூதரகக் குடும்பத்தினர், இலங்கையின் கலாச்சாரப் பெருமையை துருக்கியில் பிரதிபலித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...