நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

Date:

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் அநேகமான மே தினப் பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இலங்கை பொலிஸார் கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கையையும் அமுல்படுத்தவுள்ளனர்.

பொலிஸாரின் தகவல்படி, பிரதான பேரணிகள், அணிவகுப்புகள் மற்றும் கொண்டாட்டங்கள் கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறும் அதேவேளையில், நாட்டின் பல பிற பகுதிகளிலும் பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மே தின நிகழ்வுகளின் போது அமைதியான சூழலை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, சாலைப் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வாகனப் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதையும் பராமரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்புக்கு வெளியே நடைபெறும் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...