நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

Date:

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்த புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட தரப்பினருக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு கூடிய மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மக்கள் கோசமிட்டனர். இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்ப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார மீது மக்கள் முட்டை மற்றும் சாணத்தை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...