பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UCG) அறிவித்துள்ளது.

பெறுபேறுகள் மார்ச் 31 அன்று இணையத்தில் வெளியிடப்பட்டன. 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, நாடு முழுவதும் 2,362 மையங்களில் நடத்தப்பட்டது.
இதில் 281,810 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதினர்.அவர்களில், 221,413 பேர் பாடசாலை மாணவர்களும், 60,397 பேர் தனியாரும் ஆவர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி, 176,527 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...