பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

Date:

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சிரிய தலைநகர் டமாஸ்கஸிற்கு வருகை தந்தனர்.

அங்கு அவர்கள் சிரியத் தலைவர் அஹமது அல்-ஷாராவுடன் (Ahmed al-Sharaa) முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

கடந்த வாரம் துருக்கி மற்றும் வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட ஷெலென்ஸ்கி , தற்போது சிரியாவிற்கு வந்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, தனது நாட்டின் பாதுகாப்பு உடன்படிக்கைகளை உறுதிப்படுத்த அவர் முயன்று வருகிறார்.

உக்ரைனின் நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை (Drone Expertise) வழங்கி, அதற்குப் பதிலாக வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் (Air Defence Missiles) பெற்றுக்கொள்வது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

டமாஸ்கஸ் வந்திறங்கிய பின் ஷெலென்ஸ்கி  தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

“முக்கியமான சந்திப்புகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு பிராந்தியமும் அமைதியான வாழ்க்கையைப் பெறத் தகுதியானவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

டமாஸ்கஸ் விமான நிலையத்தில் உக்ரைன் அதிபர் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சரை சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் அல் ஷைபானி வரவேற்றார். இந்தப் பேச்சுவார்த்தையில் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...