முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

Date:

அமெரிக்கா – ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக  டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதிடிரம்ப் பேசுகையில், “அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் முடியும் தறுவாயில் இருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறேன்.

நான் இப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால்கூட, அவர்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஈரானியர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஈரானின் திட்டங்களை முறியடிக்க வேண்டிய சூழலில் இருந்தோம். ஈரானின் அணுசக்தித் திறன்களைச் சிதைப்பதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று நான் நினைக்கிறேன்.

ஈரானிடம் அணுசக்தித் திறன் இப்போது இருந்திருந்தால், நாம் அனைவரும் அவர்களை ‘சார்’ என்றுதான் அழைத்துக் கொண்டிருப்போம். அதனை யாரும் விரும்ப மாட்டார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இஸ்லாமாபாத் செல்வதற்கு நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக, அமெரிக்கா-ஈரான் இடையிலான 2ஆம்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட 2 வார கால போர் நிறுத்தத்தின் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை 21 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப் படாமல் பேச்சு தோல்வியுற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பதே பேச்சுவார்த்தையில் அமெரிக்கா விதித்துள்ள முக்கிய நிபந்தனையாக இருந்தாலும், அமெரிக்க தாக்குதலுக்கு சுமார் ரூ. 25 லட்சம் கோடி வரை இழப்பீடாக ஈரான் கோருவதாகவும் இதனால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...