மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

Date:

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக, பொரளை பொலிஸார் நேற்று (27) ஒரு சிறைக் காவலாளியையும் ஒரு காவலரையும் கைது செய்தனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சிறைக்குள் இரண்டு கைதிகளுக்கும் ஒரு காவலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர். மோதலையடுத்து அனைவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு, கைதிகளில் ஒருவரான, கொழும்பு 14, நவகம்புரவைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்தவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்புப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...