ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. தலைநகர் சென்னை தேர்தலுக்குத் தயாராகி வருகிறது.
சென்னையில் திமுக – அதிமுக 12தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. திமுக 15 தொகுதிகளிலும் அதிமுக 13 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன.
இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளன.
தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.
தமிழ்நாடு, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே மாறி மாறி ஆட்சி மாற்றம் நிகழும் இருமுனைத் தேர்தல் கட்டமைப்புக்காக நீண்ட காலமாக அறியப்படுகிறது.
இருப்பினும், 2026 தேர்தல் இந்த வழக்கமான பாணியில் நடைபெறும் மற்றொரு வழக்கமான போட்டியாக அமையவில்லை.
புதிய அரசியல் பிரவேசங்கள், மாறி வரும் தேசிய சூழல் ஆகியவற்றின் கலவை, இந்தத் தேர்தலுக்கு ஒரு தனித்துவமான மாறுபட்ட தன்மையை அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் முதல் விஜயின் அரசியல் பிரவேசம் வரை, திராவிட கட்சிகளின் லட்சியங்கள் முதல் தேசிய அளவிலான முக்கியத்துவம் வரை, பல காரணிகள் இந்தத் தேர்தலை தனித்துவமான வழிகளில் வடிவமைக்கின்றன.
தேர்தல் என்றாலே தலைநகர் சென்னைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. சென்னையை கடந்த 2021 தேர்தலில் தனது கோட்டையாக வைத்திருந்த திமுக அதனை தக்க வைக்குமா என்பது மே 4 அன்று தெரியும்.
