2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UCG) அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி, 176,527 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
