‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

Date:

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சில இனவாத சக்திகளால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து சமூக நீதிக் கட்சி தனது கவலையை வெளியிட்டுள்ளது.

இம்முறை புனித ஹஜ்ஜுப் பெருநாள் மே மாதம் 28 அல்லது 29 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது.

தற்செயலாக, இக்காலப்பகுதி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வெசாக் வாரத்திற்குள் அமைகிறது. ஹஜ்ஜுப் பெருநாள் என்பது உழ்ஹிய்யா (குர்பான்) கடமைகளோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு தினமாகும்.

தற்போது மேலெழுந்துள்ள இனவாதச் சூழலைக் கருத்திற்கொள்ளும்போது, வரும் நாட்களில் உழ்ஹிய்யா கடமைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் வெறுப்புப் பிரச்சாரங்கள் தீவிரமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எனவே, சமூக நீதிக் கட்சி முன்வைக்கும் பிரதான கோரிக்கைகள், முஸ்லிம்கள் தமது புனித ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வித அச்சமுமின்றி கொண்டாடவும், உழ்ஹிய்யா கடமைகளை சுமுகமாக நிறைவேற்றவும் அரசாங்கம் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்ட ரீதியான உழ்ஹிய்யா கிரியைகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை உள்ளூர் அதிகாரிகளூடாக வழங்க வேண்டும்.

சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிப் பிரசாரங்கள் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில், ஒரு சமூகத்தின் மதக் கடமைகள் மற்றுமொரு சமூகத்தின் பண்டிகைக் காலப்பகுதியில் வரும்போது, அதனைப் புரிந்துணர்வோடு கையாள்வதற்கு அரசாங்கம் முறையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என சமூக நீதிக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...