107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

Date:

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற மூதாட்டி, தனது 107-ஆவது வயதில் கடந்த 13ஆம் திகதி காலமானார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இவ்வுலகில் வாழ்ந்த இவர், வாழும் காலம் வரை எந்தவித நோய் நொடிகளும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இம் மூதாட்டி ஐந்து தலைமுறைகளைக் கண்ட பெருமைக்குரியவர். 7 பிள்ளைகள், 17 பேரப்பிள்ளைகள், 25 கொள்ளுப் பேரப்பிள்ளைகள், 1 எள்ளுப் பேரனையும் கண்டுள்ளார்.

மிக நீண்ட காலம் நோய்நொடி இன்றி வாழ்ந்து மரணிப்பது என்பது மிகவும் அரிதான ஒரு செய்தியாகும். அந்த வகையில் இத்தாயின் மரணம் ஒரு முக்கியமான செய்தியாக அமைந்திருக்கிறது.

ஆரோக்கியமாக வாழும் வரை நீண்ட காலம் வாழலாம் என்பதற்கு இத்தாயின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எந்தவிதமான நோய்களுமின்றி அல்லாஹ்வின் அருளால் கடந்த வருடம் வரை ரமலான் நோன்புகளை நோற்று வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...