107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

Date:

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற மூதாட்டி, தனது 107-ஆவது வயதில் கடந்த 13ஆம் திகதி காலமானார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இவ்வுலகில் வாழ்ந்த இவர், வாழும் காலம் வரை எந்தவித நோய் நொடிகளும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இம் மூதாட்டி ஐந்து தலைமுறைகளைக் கண்ட பெருமைக்குரியவர். 7 பிள்ளைகள், 17 பேரப்பிள்ளைகள், 25 கொள்ளுப் பேரப்பிள்ளைகள், 1 எள்ளுப் பேரனையும் கண்டுள்ளார்.

மிக நீண்ட காலம் நோய்நொடி இன்றி வாழ்ந்து மரணிப்பது என்பது மிகவும் அரிதான ஒரு செய்தியாகும். அந்த வகையில் இத்தாயின் மரணம் ஒரு முக்கியமான செய்தியாக அமைந்திருக்கிறது.

ஆரோக்கியமாக வாழும் வரை நீண்ட காலம் வாழலாம் என்பதற்கு இத்தாயின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எந்தவிதமான நோய்களுமின்றி அல்லாஹ்வின் அருளால் கடந்த வருடம் வரை ரமலான் நோன்புகளை நோற்று வந்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...