24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

Date:

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (02) முதல் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிவிப்பின்படி, பாதுக்கை, ஹோமகமை மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

பாதுக்கவில் இன்று (02) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேநேரம், ஹோமகமையில் நாளை (03) 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

பெலன்வத்தையில் சனிக்கிழமை (04) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர்வெட்டு வெட்டு அமுலில் இருக்கும்.

தற்போது இலங்கையைப் பாதிக்கும் வறண்ட வானிலை காரணமாக, கலதுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நீர்வெட்டுக்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைக் கண்காணித்து நிர்வகிப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரினால் ஒரு சிறப்புச் செயல்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு, தற்போதுள்ள நீர் ஆதாரங்கள், உற்பத்தித் திறன்கள் மற்றும் விநியோக முறைகளை தொடர்ந்து கண்காணிக்கும்.

 

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...