Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

Date:

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர், நேற்று  தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை, வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இவர் கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகாலை மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் மீட்கப்பட்ட போது வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விளையாட்டின் ஏதேனும் சவால்களால் (Tasks) தூண்டப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், தயவுசெய்து உடனடி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உதவிக்கு அருகிலுள்ள சுகாதார நிலையங்கள் அல்லது உதவி இலக்கங்களை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...