இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே நல்லெண்ணம், கருணை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதே இந்த ஊர்வலத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளையிலிருந்து ஆரம்பமாகும் இந்த புனித பாதயாத்திரை, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் போதி மரக்கன்று என்பவற்றினை ஏந்தியவாறு நாடளாவிய ரீதியில் பயணிக்கவுள்ளது.
இதற்காக வியட்நாமின் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட துறவிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.
