ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

Date:

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி, கல்வித்துறைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய கஹட்டோவிட்டவைச் சேர்ந்த திருமதி M.M.K. மௌபியா (Moufiya) அவர்கள் தனது ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

அவரது சிறப்பான சேவையைப் பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் இணைந்து நேற்றைய தினம் விசேட நன்றி நவிழல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிலையத்தில் இந்த நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரும், மௌபியா டீச்சர் அவர்கள் தனது கடமைக் காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு, ஆசிரியர்களுக்கு வழங்கிய வழிகாட்டல்கள் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டிப் பேசினர்.

கல்வித்துறையில் ஒரு முன்மாதிரி ஆளுமையாகத் திகழ்ந்த அவரது ஓய்வுக்காலம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய சக ஆசிரியர்கள் தமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஓய்வுபெறும் மௌபியா டீச்சரின் எதிர்கால வாழ்வு சிறக்க எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...

ஐ.ம.ச. தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம்

2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவிக்கு,...