ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்கள் அடுத்த மாதம் 3ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் இதன்போது கைச்சாத்திடவுள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய பயிற்சி வேலைத்திட்டங்கள், அலுவலக குழு பரிமாற்றம் மற்றும் ஒன்றிணைந்த ஆய்வு திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பில் இந்த ஒப்பந்தங்கள் அமையப்பெறவுள்ளன.
