மின்னல் தாக்கம் குறித்து அறிவுறுத்து : 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Date:

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இன்று (03) பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் 18 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையும் கடும் மின்னல் தாக்கமும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...

ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்...

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...