புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பயணிகளின் தேவை கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கமைய வெளி மாகாணங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் 20ஆம் திகதிக்கு பின்னரும் கொழும்பு வருவதை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை நெடுந்தூர சேவைகள் உட்பட சுமார் 7000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அலுவலக ரயில் சேவைகள் இன்று முதல் வழமை போன்று சேவையில் ஈடுபடுமென ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
