புனித ஹஜ் பெருநாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அரபா தின விசேட உரை, இன்று பிற்பகல் 2:00 மணி முதல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா (Nethra TV) அலைவரிசை ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
மினாவில் இருந்து அரபா மைதானத்தில் ஒன்று கூடியிருக்கும் கோடிக்கணக்கான உலக முஸ்லிம்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரபா உரையை, தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கையின் பிரபல மார்க்க அறிஞர்கள் அஷ்ஷைக் முஹம்மத் பிர்தவுஸி நளீமி, அஷ்ஷைக் அப்துல் முஜீப் ஸாலிஹ் கபூரி அவர்கள் தமிழில் விபரிக்கவுள்ளனர்.
அந்நமிரா பள்ளிவாசலில் நிகழ்த்தப்படும் பிரதான அரபா உரையின் நேரடி மொழிபெயர்ப்பு மற்றும் அரபா தினத்தின் மகத்துவங்கள் குறித்த விசேட விளக்கங்களை இந்த நேரடி ஒளிபரப்பின் ஊடாக நேயர்கள் கண்டுகளிக்கலாம்.
https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1032019866053154
