ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஹில் டோல் எழுதிய தேசிய பாதுகாப்பு குறித்த ‘Security Beyond Empowerment’ என்ற நூல் வெளியீடு!

Date:

இலங்கை பொலிஸ்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு உளவுத்துறையின் மூத்த நிபுணரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் மஹில் டோல் அவர்கள் எழுதிய “බලගැන්වීමෙන් ඔබ්බට ආරක්ෂාව” (Security Beyond Enforcement) என்ற புதிய நூல் நேற்று (20) பிற்பகல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் முக்கியப் பிரமுகர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் எச்.இ. அப்துல்லா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு, உளவுத்துறையின் நுணுக்கங்கள் மற்றும் தற்கால சமூகப் பாதுகாப்பு சவால்கள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனும், விழிப்புணர்வு பெற விரும்பும் புத்திஜீவிகளும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு முக்கிய நூலாக இது கருதப்படுகிறது.

பாதுகாப்புத் துறையில் நீண்டகால அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியின் பார்வையில் எழுதப்பட்டுள்ளதால், இந்த புத்தகம் பாதுகாப்பு உத்திகள் குறித்த புதிய சிந்தனையை வாசகர்களுக்கு வழங்கும் என விழாவில் கருத்துப் பகிரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...