கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இது குறித்து தெரிவிக்கையில், அவிசாவளையில் 180 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக ஏனைய பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி விபரங்கள் பின்வருமாறு, ஹன்வெல்ல: 158 மி.மீ, தெரணியகல: 122 மி.மீ

இந்தக் கனமழை காரணமாக நேற்று (14) இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், அது இதுவரை அனர்த்த எச்சரிக்கை மட்டத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அத்தனகலு ஓயாவின் தூனமலே நீர்மானி நிலையப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் 176 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிந்தவூரில் நடைபெற்ற மஸ்ஜிதுகள் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் செயலமர்வு: MEEDS திட்டமும் அறிமுகம்!

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை முறையான வழிகாட்டல்களின்...

எல் நினோவை சமாளிக்க அமைச்சரவை உப குழு நியமனம்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிலைமைக்கு முகம்கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைள்...

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...