கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இது குறித்து தெரிவிக்கையில், அவிசாவளையில் 180 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக ஏனைய பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி விபரங்கள் பின்வருமாறு, ஹன்வெல்ல: 158 மி.மீ, தெரணியகல: 122 மி.மீ

இந்தக் கனமழை காரணமாக நேற்று (14) இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், அது இதுவரை அனர்த்த எச்சரிக்கை மட்டத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அத்தனகலு ஓயாவின் தூனமலே நீர்மானி நிலையப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் 176 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...